Sunday, April 25, 2010

உலக கிண்ண களியாட்டத்தில் தென்னாபிரிக்கா.

 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்க இன்னும் இரண்டு மாதங்களுக்கும் குறைவான நாட்களே இருக்கின்ற நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கோலாகலங்கள் தொடங்கியுள்ளன.
ஜூன் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 11 ஆம் தேதி வரை 2010 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இடம் பெறவுள்ளன.
32 நாடுகள், 9 நகரங்களிலுள்ள 10 விளையாட்டு அரங்கங்களில் இடம் பெறவுள்ள இந்தப் போட்டிகளில் கலந்து கொள்கின்றன.
உலகெங்கும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் நேரிலும் தொலைக்காட்சியிலும் இந்தப் போட்டிகளை கண்டு ரசிப்பார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி-ஓர் அறிமுகம்
உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழா என்று வர்ணிக்கப்படும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் ஒரு ஆப்பிரிக்க நாட்டில் முதல் முறையாக நடைபெறவுள்ளன.
ஆப்பிரிக்காவின் ஒரு அணி உலகக் கோப்பையை வெல்லுமா என்கிற எதிர்பார்ப்பு அந்தக் கண்டத்திலுள்ள அனைத்து நாடுகளிலும் இருக்கிறது.
இந்த விடயத்தில்,மொழி, மதம், இனம், கலாச்சாரம், அரசியல், போட்டி பொறாமை என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு ஒற்றுமை இருக்கின்றது. 

நன்மைகளை அளிக்கவுள்ள போட்டிகள்


ஃபுட்பால் ஃபார் ஹோப் அதாவது ஒளிமையமான எதிர்காலத்துக்காக கால்பந்து என்கிற லட்சியத்துடன் சர்வதேச கால்பந்து சம்மேளனம் இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை முன்னெடுத்துச் செல்கிறது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் முடிவுக்கு வந்த பிறகும் அது ஏற்படுத்தப்போகும் நன்மைகள் தொடரும் என சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் தலைவர் செப் பிளெட்டர் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் கல்வி, அதுவும் கால்பந்தின் மூலம் அதை விளையடும் இளம் வீரர்கள் மூலம், அவர்களின் ஆரோக்கியத்தின் மூலம் நன்மை ஏற்படப் போகிறது. ஆரோக்கியம், கல்வி, கால்பந்து ஆகிய நன்மைகள் 2010 தொடங்கி 2015 ஆம் ஆண்டு வரை தொடரும்
செப் பிளாட்டரின் இந்த அறிவிப்பு உலகமெங்கும் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த முன்னெடுப்பில் ஃபிஃபாவுக்கு உதவ உலகின் பல நாடுகள் முன்வந்துள்ளன.
கால்பந்தின் மூலம் எதிர்காலம் என்கிற லட்சியம் ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள அனைவருக்கும் உதவும் என்றும் ஃபிஃபாவின் தலைவர் கூறியுள்ளார்.
இந்தத் திட்டங்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு மட்டும் உதவி செய்யும் என்றில்லை, ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் பலன் பெறும். ஆப்பிரிக்க கண்டத்தில் இந்த முன்னெடுப்பு நடைபெற்ற பிறகு உலகம் முழுவதும் இந்தத் திட்டம் எடுத்துச் செல்லப்படும்.
புதிய விளையாட்டு அரங்கங்கள்



ஜூன் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பை கால்ப்ந்து போட்டியில் 32 நாடுகள் பங்கு பெறுகின்றன. அவை எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
போட்டிகள் 10 மைதானங்களில் நடைபெறும். இவை 9 நகரங்களில் அமைந்துள்ளன. கேப்டவுன், டர்பன், ஜோஹனஸ்பர்க், ப்ளூம்ஃபொண்டைன், போர்ட் எலிசபெத், நெல்ஸ்ப்ரூயிட், பொலக்வானே, ரஸ்டன்பர்க் மற்றும் பிரெட்டோரியா ஆகிய நகரங்களில் போட்டிகள் இடம் பெறவுள்ளன.
போட்டிகளுக்காக பல புதிய விளையாட்டரங்கங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று சாக்கர் சிட்டி இந்த அரங்கில் தான் 2010 உலகக் கோப்பை போட்டியின் முதல் மற்றும் இறுதி ஆட்டங்கள் இடம் பெறவுள்ளன.
கலாபாஷ் எனும் மிகவும் புகழ் பெற்ற ஆப்பிரிக்க பானையின் வடிவத்தை மையப்படுத்தி இந்த விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அரங்கில் 95,000 பேர் அமர்ந்து போட்டிகளைக் காண முடியும்

போட்டி கால அட்டவணை.



இன்னும் எஞ்சியிருக்கும் நாட்கள்

No comments:

Post a Comment