Thursday, April 15, 2010

கிரிக்கட் ஜோக்...

இலங்கையில் ஒருநாள் சர்வதேச விளையாட்டின் போது,

வர்ணனையாளர்:
இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான முதாலவது ஒருநாள் போட்டி அழகான ரன்கிரி தம்புள்ள விளையாட்டரங்கில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது,

இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடுகிறது,

இப்போது இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக உபுல் தரங்க மற்றும் கவ்ரவ விளையாட்டு அமைச்சர் சனத் ஜெயசூரிய ஆகியோர் கலத்தினுள் நுழைகின்றனர்,

கவ்ரவ விளையாட்டு அமைச்சர் சனத் ஜெயசூரிய தனது கார்ட்ஐ பெற்றுக்கொண்டு வளமைப்போல தனது பாட், பால் கார்ட் மற்றும் ஹெல்மட்டை சரி பார்த்து, அசிஸ் நேஹ்ராவின் பந்திற்கு தயாராகிறார்,

இதோ ஹசிஸ் நேஹரவின் முதல் பந்து வீசப்படுகிறது, கவ்ரவ விளையாட்டு அமைச்சர் சனத் ஜெயசூரிய துடுப்பெடுத்தாடுகிறார் பந்து பாட்டிற்கும் பாடிற்கும் இடையே சென்று லேக் ஸ்டாம்பை பதம்பார்கிறது.

துடுப்பாட்டவீரர் ஆட்டமிலப்பை மறுத்து சொல்கிறார் .. எனக்கு அதிகூடிய பவர் இருக்கிறது எனவே நடுவர்களுக்கு ஆட்டமிலப்பு வழங்க முடியாது !!"

திடிரென்று நேரடி வர்ணனை தடைபடுகிறது......

ஒரு வெள்ளை வான் மைதானத்தைவிட்டு தூசியுடன் கிளம்புகிறது !!!

நடுவர்களான பில்லி டாக்ரோவும் குமார தருமசெனவும் மைதானத்தின் நடுவில்..

ஆட்டமஇழப்பு மூன்றாவது நடுவருக்கு வழங்கப்படுகிறது, நடுவரின் சிஸ்டம் தடைபடுகிறது

இந்திய அணி தலைவர் டோனி நடுவரிடம் போய் தாமதத்திற்கான காரணத்தை வினவுகிறார்

அதனிடையே இந்திய அணியின் ஆடை மாற்றும் அறையினுள் ஆயுதம் தாங்கிய நபர்கள் நுழைகின்றனர்

சிஸ்டம் சரியாக இந்திய அணி விளையாட தயாராகிறது.

திடீரென பெரியத்திரையில் "ஆட்டமிழக்கவில்லை" "NOT OUT". என வருகிறது

கவ்ரவ விளையாட்டு அமைச்சர் சனத் ஜெயசூரிய நுறு ஓட்டங்களை பெற்றுகொல்கிறார்

பி.கு. அசிஸ் நெஹ்ராவிற்கு சர்வதேச கிரிக்கட்டில் விளையாட தடைவிதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார்,

.

No comments:

Post a Comment