Friday, December 3, 2010

பெறிது...பெறிது...உலகில் பெறிது...

(புதிய கிண்ணஸ் சாதனைகள்)

பெரிய கஷ்டட் பிஸ்கட்.

சைமன் மோர்கணினால் உருவாக்கப்பட்ட உலகிலே பெரிய கஷ்டட் பிஸ்கட் 18 நவம்பர் 2010 கிண்ணஸ் புத்தகத்தில் பதியப்பட்டது.
இதன் நீளம் 59 சென்றி மீடர்களும் அகலம்  39சென்றி மீடர்களுமாகும்.


காணொளி...



மிகப்பெரிய காலனி

நெதர்லாந்தில் உருவாக்கப்பட்ட  இக்காலனியின் நீலம்5.50 m (18 ft 0.53 in) x 2.11 m (6 ft 11.07 in) and is 2.90 m (9 ft 6.17 in). இது  நவம்பர்  17,2010 அன்று கிண்ணஸ் புத்தகத்தில் இடம்பெற்றது.


பெரிய  போத்தல் மூடி ரக்பி பந்து .

நிவ்சிலாந்து சாதனையாளர் அளிச்டார் கல்பிணினால் தயாரிக்கப்பட்ட போத்தல் மூடிக்களினால் தயாரிக்கப்பட்ட ரக்பி பந்து. இது உலக கிண்ணஸ் தினத்திற்காக விசேடமாக தயரிக்கப்பது.

உங்கல் கருத்துக்களை பதியவும்..
.
.
.

Tuesday, November 16, 2010

உங்கள் எல்லோரையும் இலங்கைக்கு உயிருடன் வந்து பார்க்க ஆசைப்படுகிறேன் ‐ சவப்பெட்டியினுள்ளிருந்து அல்ல‐ றிஸானா நபீக்

என்னுடைய அன்பு நிறைந்த இலங்கைச் சகோதர சகோதரிகளே!

சவுதி அரேபியாவிலோ அன்றி இந்த உலகத்திலோ இது தான் எனது கடைசி ஹஜ் பெருநாளாக இருக்கக்கூடும். என்னுடைய முடிவு விரைவில் நிச்சயிக்கப்பட்ட விடும்.  நான் நிரபராதி எனக்காணப்பட்டால் எனது வீட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டு விடுவேன். அல்லாவிட்டால் நான் சிரச் சேதம் செய்யப்படுவேன்.  மூதூர்க் கிராமத்தில் வறுமையாலும் பட்டினியாலும் பீடிக்கப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்து தனது பெற்றோரையும் சகோதரர்களையும் பாதுகாக்கவும் பராமரிக்கவும் வேண்டும் என்ற பிடிவாதத்துடன் புறப்பட்ட அந்த யுவதியின் முடிவு அதுவாகத் தானிருக்கும்.  ஆரம்பத்தில், என்னை சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக அனுப்பினால் எமது குடும்பத்திற்கு துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என அந்த மனிதர் தன்னை வற்புறுத்துவதாக அப்பா அம்மாவிடம் முணுமுணுத்தார்.

எனது அம்மா அதிர்ச்சியடைந்தவராக "அவள் ஒரு சிறு பெண். அவளை எப்படி அவ்வாறு அனுப்ப வேண்டும்;" என மறுத்து விட்டார். நாட்கள் செல்லச்செல்ல அந்த மனிதரின் நச்சரிப்பால் அப்பா அதற்கு உடன்பட்டார். ஆனால் அம்மா அதற்குச் சம்மதிக்கவி;ல்லை. சாப்பிட்டால் என்ன பட்டினி கிடந்தால் என்ன நாங்கள் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்தே இருப்;போம் என அம்மா கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்.  ஆம் அது உண்மை தான். நாங்கள் சில சமயங்களில் சாப்பிட்டோம். பல சமயங்களில் பட்டினியாகவே கிடந்தோம். நாங்கள் ஒரு போதும் வயிறார உண்டதில்லை.

பசியை நான் தாங்கிக் கொள்ளும் போது நான் நோன்பு இருப்பதாகவே நினைத்துக் கொள்வேன். ஆனால் அந்த நேரத்தில் எனது இளைய சகோதரர் பசிக்களையால் ஒரு மூலையில் சுருண்டு படுத்துக் கொண்டு அப்பா எதையாவது கொண்டு வரமாட்டாரா என்று நம்பிக்கையுடன் காத்திருப்பதை என்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாமலிருந்தது. 

இதன்காரணமாக நான் எனது மனதை மாற்றிக் கொண்டு, எனது பெற்றாரிடம் எமது குடும்பத்தின் இக்கட்டான நிலைமையை எடுத்துக் கூறி பணிப்பெண்ணாக நான் சவுதி அரேபியாவுக்குப் புறப்படத் தயார் எனச் சொன்னேன்.  எனது முடிவு அப்பாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அம்மாவின் முகத்தில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடி முகத்தை மறைத்தது.  நான் சொன்னேன் "கவலைப்படாதீர்கள் உம்மா. நான் என்னைப் பார்த்துக் கொள்வேன். எப்போதுமே நாங்கள் இவ்வாறு வறுமையில் உழல முடியாது. மூத்த பிள்ளை என்றளவில் குடும்பம் குறித்து பொறுப்புக்கள் எனக்கும் உண்டு. அதை நான் செய்கிறேன்;" என்று கூறினேன்.

திருமலை நகரத்தின் ஒரு பகுதியில் இருந்ததைத் தவிர பெரிய நகரம் ஒன்றிலும் நான் ஒரு போதும் வாழ்ந்ததில்லை.  பெரிய பஸ் நிலையத்தையோ அல்லது பெரிய ரயில் நிலையத்தையோ நான் ஒரு போதுமே கண்டதில்லை. திருமலை நகரத்தின் சீனன்குடா விமானப்படைத்தளத்திருந்து விமானங்கள் பறப்பதைக் கண்டிருக்கிறேன். என்றோ ஒரு நாள் விமானத்தில் ஏறுவேன் என்று நான் கற்பனை பண்ணிக் கூடப் பார்த்ததில்லை.

மிகத் தொலைவிலுள்ள ஒரு நாட்டுக்குத் தன்னந்தனியே பிரயாணம் செய்வதையிட்டு என்னை நானே தைரியப்படுத்திக் கொண்டேன். ஒவ்வொன்றுமே அச்சமூட்டுகிற ஒன்றாகவே எனக்கு இருந்தது. மீதி ஒரு வரலாறாகி இருக்கிறது. ஆம் வரலாறு. றிஸானா நபீக்கினுடைய வரலாறு. நீங்கள் எல்லாரும் அறிந்தது தான். நான் இழைக்காத தவறுக்காக கடந்த ஐந்து வருடங்களாக இந்தச் சிறையில் நான் அடைபட்டிருக்கிறேன்.

விரைவில் நான் விடுதலை செய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம். அதைப்பற்றிப் பரவாயில்லை. ஆனால் நான் ஒரு விடயத்தை வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். அது என்னவென்றால் நான் ஒரு குற்றமும் இழைக்காதவள் என்பது தான். அந்தக்குழந்தையை நான் ஒரு போதும் கொல்லவில்லை. அந்த அப்பாவிக் குழந்தை மீது அவ்வாறான ஒரு பேய்த்தனமான நடவடிக்கையை மேற்கொள்ள எனக்கு எந்தத் தேவையும் இருக்கவில்லை.  அந்தச்சிறுவனுக்கு நான் உணவூட்டியது அது தான் முதன் முறையுமல்ல.

அன்று அவனை என்னிடம் தந்த போது அவர்களது உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து ஏற்றுக் கொண்டேன். ஏனெனில் நான் இந்த அரபு நாட்டுக்கு வந்தது மாடு போல் உழைத்தாவது எனது குடும்பத்தாருக்கு மூன்று வேளை உணவு போடத்தான்.  எனது பணி உடன்படிக்கையில் என்ன உள்ளது என்பதை நான் ஒரு போதும் அறிந்திருக்கவில்லை. எனினும் இரவோ பகலோ எனக்குத் தரப்படும் எந்த வேலையையும் நான் செய்யத் தயாராக இருந்தேன்.

குழந்தைக்கு ஏதோ நடந்து விட்டது என்பதை அறிந்ததும் எஜமானி வீரிட்டுக் கத்தினாள். கூக்குரலிட்டாள். கோபத்துடன் அராபிய மொழியில் என்னை வைதாள். அவள் என்ன பேசினாள் என்பதை நான் அறியேன். எஜமானும் அந்த நேரத்தில் வந்து விட்டார். அடுத்த கணமே இடம் வலம் என நான் அறையப்பட்டேன். ஒரு பந்தை உதைப்பது போல என்னை உதைத்தனர். அல்லா அல்லா எனக்கத்தியபடியே தவறாக நான் எதையும் செய்யவில்லை என நான் தமிழில் சொன்னேன். ஆனால் நான் சொன்னது எதுவும் அவர்கள் காதில் ஏறவில்லை.

அவர்கள் பலமுறை பலருக்கு தொலைபேசி எடுத்தார்கள். சில உறவினர்கள் பெரும் சத்தம் போட்டுக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்கள். நான் தேம்பியழுதபடி அந்த ஹோலின் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தேன்.   மனிதத் தன்மையற்ற அவர்களுடைய தாக்குதலைத் தாங்க முடியாதவளாக இருந்தேன். நாங்கள் ஏழைகள் தான். அதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால் கிரிமினல்கள் அல்ல. என்னுடைய தாயோ அல்லது தந்தையோ என்னை ஒரு போதும் தொட்டதில்லை.

அவர்கள் குழந்தையை வைத்தியசாலைக்குக் கொண்டு போகும் அவசரத்தில் இருந்தார்கள் என உணர்ந்தேன். அதேவேளை பொலிஸாரின் வாகனம் ஒன்று சைரன் ஒலியை எழுப்பியவாறு வந்து சேர்ந்தது. அங்கிருந்தவர்கள் என்னைச் சுட்டிக்காட்டி பொலிஸாரிடம் ஏதோ பேசினார்கள்.

எனக்கு நடுங்கத் தொடங்கியது. நான் சிறு வயதிலிருந்தே பொலிஸாரைக் கண்டால் அஞ்சுபவள். ஏன்னுடைய பாடசாலை நாட்களில் பொலிஸாரைக் கடந்து செல்லவேண்டி ஏற்பட்டால் அந்நேரத்தில் பயம் காரணமாக  நான் கதைப்பதை நிறுத்துவதுடன் மறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விடுவேன்.  இப்போது நான் உணர்ந்தேன் நான் ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டுப்பட்டுள்ளேன் என. பொலிஸார் என் கைகளில் விலங்கை மாட்டினர். நான் அழுதேன். தங்களுடன் வரும்படி அவர்கள் என்னைக் கேட்டனர். நான் மறுத்தேன்.

அவர்கள் சங்கிலியைப்பிடித்து இழுத்துக் கொண்டு அராபிய மொழியில் என்னைத் திட்டினர். அது மிகவும் வலி தருவதாக இருந்தது. நான் அவர்களுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.  எனது மனம் மூதூருக்குப் பறந்து போனது. அன்பான உம்மா, உங்களுடைய மகளுடைய கதி இப்போது என்னவென்று அறிய நேர்ந்தால் உங்களுடைய இருதயம் நின்று விடும்.

ஆனாலும் உம்மா நான் எந்தவொரு  தீங்கையும் இழைக்கவில்லை. அதனால் நீங்கள் கவலைப்படாதீர்கள்? இதனை நான் அல்லாவிடம் விட்டு விட்டேன். இந்த அப்பாவியான வெள்ளாட்டை  அந்தச் சிங்கங்களிடமிருந்து அவர் தான் காப்பாற்ற வேண்டும். நான் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகள்  தமக்கிடையே இது குறித்து ஏதோ வாதித்தார்கள்.

அரபு மொழியில் எழுதப்பட்ட சில காகிதங்களைத் தந்து என்னை ஒப்பமிடச் சொன்னார்கள். நான் தமிழில் ஒப்பமிட்டேன். வேறு சில பெண்களுடன் சேர்த்து நான் சிறையில் அடைக்கப்பட்டேன். அவர்கள் என்னைச் சுற்றி இருந்தபடி என்னை அழுவதை நிறுத்தும்படி கேட்டார்கள். எனக்கு அவர்கள் உதவுவதாக வாக்குறுதி அளித்தார்கள்.  அவர்கள் என்னிடம் வேறு மொழியில் கேள்விகளைக் கேட்டார்கள். நான் தமிழில் விளக்கமளித்தேன். அவர்கள் புரிந்து கொண்டார்களா இல்லையா என்று என்னால் சொல்ல முடியவில்லை.  ஆனால் அவர்களில் ஒருவரோ இருவரோ அரபு மொழியில் நன்றாகப் பேசக்கூடியவர்களாக இருந்தனர். அங்கு இரண்டு சிங்களப் பெண்களும் இருந்தார்கள் அவர்களிடமிருந்து பின்னர் நான் சிங்களத்தைக் கற்றுக் கொண்டேன்.  அவர்கள் சிறிலங்கா? சிறிலங்கா?  என என்னை விசாரித்தனர். நான் ஆம் என்று தலையசைத்தேன்.

அவர்களுள் வயதானவரான ஒருவர் என்னை தன்னுடன் மார்பில் அணைத்துக் கொண்டார். அப்போது எனது தாயின் அரவணைப்பில் இருப்பது போன்று நான் உணர்ந்தேன்.  இரண்டு நாட்களுக்குப்பிறகு நான் இன்னொரு விசாரணை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். கறுத்த சற்றே பருத்த ஒரு இந்தியர் என்னிடம் தமிழில் சில கேள்விகள் கேட்டார். அந்தத் தமிழ் என்னுடைய தமிழ் அல்ல.  அது நாங்கள் சினிமாவில் வழமையாகக் கேட்கிற தமிழும் அல்ல.  சற்று வித்தியாசமானது.  நான் முடிந்தளவு அவருடைய கேள்விகளைப் புரிந்து கொண்டு அழுதவாறே பதிலளித்தேன்.   நான் சவுதியில் இறங்கிய இரண்டு வாரத்தின் பின்னர் முதன் முதலில் தமிழ் பேசக் கிடைத்த சந்தர்ப்பம் அது.

ஆனால் அந்த இந்திய மனிதர் எனது கதையை முழுவதுமாகப் புரிந்து கொண்டிருந்தார் என்று நான் நினைக்கவில்லை. நான் சொன்னவற்றை அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் அவர் மொழி பெயர்த்துச் சொன்னார். அவ்வதிகாரி அவரிடமும் என்னிடமும் பல கேள்விகளைக் கேட்டார். இறுதியாக அவர் என்னைக் கையொப்பமிடச் சொன்னார். நான் கையொப்பம் இட்டேன்.

என்னுடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் என்னை அனுப்பி விடுவார்கள் என்றே நான் நினைத்திருந்தேன். இல்லை. அவ்வாறு நடக்கவில்லை. அது எனது சோதனைக் காலத்தின் முடிவு அல்ல. அது தான் ஆரம்பம்.  அவ்வாறு ஆரம்பித்த விடயங்கள் விரைவிலேயே துன்பகரமான முடிவுக்கு இட்டுச் சென்றது.

அல்லாவிடம் மன்றாடுவதையும் அழுவதையும் தவிர எனக்கு வேறு எந்த வழியும் இல்லாதிருந்தது. எனது எல்லாப் பிரார்த்தனைகளிலும் அதனையே நான் செய்தேன். நான் படுக்கைக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் அல்லாவிடம் எனது விடுதலைக்காகப் பிரார்த்தித்துக் கொண்டே படுக்கைக்குச் செல்வேன். இந்த நாள் எனது விடுதலைக்கான நல்ல செய்தியைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையுடன் அதிகாலையில் தொழுவதற்காக எழுந்து விடுவேன்.

சிறைச்சாலையில் குர்ஆனை வாசிப்பதற்கும் தொழுவதற்கும் வசதி செய்து தரப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போதைய நிலைமை எனக்கு அதிக நம்பிக்கையைத் தருவதாக இல்லை. எனது எஜமானியின் வீட்டில் பணியாற்றிய இரண்டு வாரங்களைவிட மிக அதிகமான நாட்களை நான்இந்தச் சிறையில் கழித்து விட்டேன்.  என்னுடைய பெற்றார் இங்கு வருகை தந்தனர்.

அவர்களுடைய வருகை எனக்கு நிறைந்த மகிழ்ச்சியைத் தந்தது. என்னால் அவர்களுடன் அதிகம் பேச முடியவில்லை. ஆனால் அழ மட்டுமே முடிந்தது. நான் அவ்வாறு செய்திருக்கக் கூடாது. ஆனால் எனது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை என்னால் தடை செய்ய முடியவில்லை. அதேவேளை எனது வாயிலிருந்து சொற்கள் இலகுவாக வெளியே வரவுமில்லை. அவர்களும் தேம்பித் தேம்பி அழுதபடியே தான் பிரிந்து சென்றார்கள்.

எங்களுடை விதியை நொந்து கொண்டே அவர்கள் போனார்கள். மறுபுறத்தில் எனது கழுத்தில் கத்தி இறங்கும் வரையும்  எனது இறுதி மூச்சு உள்ளவரையும் இந்த முகம் தெரியாத துரதிர்ஷ்டம் பிடித்த பெண்ணிற்காக தங்களது பணத்தையும் நேரத்தையும் செலவழித்த அனைவருக்காகவும் அவர்களுடைய நல்வாழ்க்கைக்காகவும் நான் அல்லாவிடம் பிரார்த்திப்பேன்.

அதேபோல் எனக்காகப் பிரார்த்தித்த இலங்கையின் சகோதர சகோதரிகளையும் நான் அறிவேன். இங்கு தங்களுடைய பிரார்த்தனைகளின் போது என்னை நினைவு கூர்ந்த முஸ்லிம் சகோதர சகோதரிகளையும் நான் நினைவு கூர்கிறேன்.  ஹஜ் முடியும்வரை எவரும் சிரச்சேதம் செய்யப்பட மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்.  இறுதியாக என்னுடைய விடுதலைக்காக தங்களாலான என்னென்ன முயற்சிகளைச் செய்யலாமோ அவ்வளவு முயற்சிகளையும் செய்த இலங்கையின் ஜனாதிபதி மற்றும் முகமறியாத ஆண்களும் பெண்களுமான பலருக்கும் எனது நன்றியைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். 

உங்கள் எல்லோரையும் இலங்கைக்கு உயிருடன் வந்து பார்க்க வேண்டும் என்றே நான் ஆசைப்படுகிறேன். சவப்பெட்டியினுள்ளிருந்து அல்ல. அது முடியாது போனால் நான் உங்களை சொர்க்கத்தில் சந்திப்பேன். நிச்சயமாக அங்கு எனக்கு ஒரு இடம் இருக்கும். ஏனென்றால் உண்மையாகவே முழுமையாக நான் ஒரு அப்பாவி.

சலாம்.
றிஸானா நபீக்
(இது உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது.)
 நன்றி : எம்.எஸ் ஷாஜ்ஜகான்

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்த இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர்ப்பிரதேசத்தைச் சேர்ந்த றிஸானா நபீக்கிற்கு சவுதி அரேபிய உயர் நீதிமன்றம் 2007 ஜுன் 16இல் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.  சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் பணிப்பெண்ணாகக் கடமை புரிந்து வந்த அவர் 2005ஆம் ஆண்டு மே மாதம் அவரது பராமரிப்பில் இருந்த குழந்தையைக் கொன்றார் என்ற குற்றச்சாட்டின் கீழேயே இம் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.  அவர் மீதான குறுக்குவிசாரணையின் போதோ அல்லது நீதிமன்ற விசாரணையின் போதோ  அவர் சட்டத்தரணிகளுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை0.

அவருடைய பராமரிப்பில் இருந்த குழந்தை இறந்த போது நிஸானா றபீக்கிற்கு வயது 17. தான் 1988ஆம் ஆண்டே பிறந்ததாக அவர் அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார். எனினும் அவருடைய பாஸ்போர்ட்டில் 1982 ஆம் ஆண்டு எனக்குறிப்பிடப்பட்டிருக்கிறது. ( மத்தய கிழக்கிற்கு பணிப்பெண்களை அனுப்பும் பல ஏஜென்சிகள் வயது மதம் போன்றவற்றில் பாஸ்போர்ட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி அனுப்புவதென்பது இலங்கையில் வழமை) அவருடைய வயது குறித்து மருத்துவ பரிசோதனைகள் எதுவும் நடாத்தப்படவில்லை. அவருடைய பிறப்புச்சான்றிதழைச் சமர்ப்பிக்க வாய்ப்பும் வழங்கப்படவில்லை என சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டியிருக்கிறது.

றிஸானா மீதான மரண தண்டனையை ரத்துச் செய்வதில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஆசிய மனித உரிமைகள் பணியகம் உட்படப் பல அமைப்புக்கள் முயற்சி எடுத்து வருகின்றன.  2007இல் 76 வெளிநாட்டவர்கள் உட்பட 158 பேருக்கு மரண தண்டனை வழங்கியிருக்கிறது. 2008இல் 40 வெளிநாட்டவர் உட்பட 102 பேருக்கு மரண தண்டனை வழங்கியிருக்கிறது.  2009இல் 19 வெளிநாட்டவர் உட்பட ஆகக்குறைந்தது 69 பேருக்கு மரணதண்டனை வழங்கியிருக்கிறது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. 

அவருடைய விடுதலைக்கான மனுவில் ஒப்பமிட http://www.petitiononline.com/Rizana/petition.htmlhttp://www.change.org/petitions/view/stop_the_execution_of_rizana_nafeek_in_saudi_arabia முகப்புப் பக்கம் http://www.facebook.com/group.php?gid=2522506930

Sunday, November 7, 2010

உலகின் மிகவும் அகலமுள்ள வாய் கொண்ட மனிதன்!!!!

ஒருவன் அதிகம் பேசினால் நம் பெரியவர்கள் உன் நாவு நீண்டுவிட்டது அல்லது உன் வாய் பெருத்துவிட்டது என்பார்கள்.

ஆனால் கீழ் வரும் படத்தை பார்த்து நம் பெரியவர்கள் என்ன சொள்ளப்போகிரார்களோ !?


ஆபிரிக்காவில் என்கோலியாவை சேர்ந்த இவர் பெயர் பிரான்சிகோ டொமின்கோ ஜோகிம்ஸ், இவரது வாயின் அகலம் 17 சென்றி மீட்டர்கள் .

காணொளி.



நீங்களும் இதை போல முயற்சிக்க வேண்டாம்..



Monday, October 25, 2010

நான் ஏன் பதிவுலகத்திற்கு வந்தேன்.


தொடர்பதிவுக்கு அழைத்து இரண்டு மாதமும் ஒருவாரம் ஆகின்ற நிலையில் தொடர்பதிவை எழுத என்னத்தை தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு முதற்கண் நன்றிகள். எனது அடுத்த அரை நண்பர் முபாரக் அரும்பவூர் என்னையும் நண்பன் பாயிக்கையும்  தொடர்பதிவுக்கு இரண்டு மாதத்திற்கு முன் அழைத்திருந்தார். பதிவு எழுத ஆர்வமின்மை, வேலை பழு மற்றும் திடீர் தாய் நாட்டுக்கு விஜயம் போன்றவை  தாமதற்கு காரணம் எனலாம். மூன்று மாதமாக பதிவுகள் எழுதாமல் இருந்த என்னை பதிவு உலகத்திற்கு மீண்டும் காலடி வைக்க உதவிய நண்பன் முபாரக்கிற்கு மனமார்ந்த நன்றிகள். தொடர்பதிவெழுத நாம் என்ன பதிவுலக தாதாக்களா??

ஏதோ நான் பதிவுலகத்திற்கு வந்த உண்மைகள் இதோ....

1.அது என்ன உண்மை உணர்வுகள்?

ப்ளாக் ஆரம்பிக்க நிறைய பெயர்களை தேடினேன் கிடைக்கவில்லை. நாம் என்ன பொய்யா எழுதப்போறோம் உண்மையதானே.. அதனால்தான் உண்மை உணர்வுகள்..

பதிவுலகத்திற்கு வர காரணம்?

பாடசாலை காலத்திலிருந்தே இணையத்தில் ஆர்வம் இணைய பக்கங்கலை உருவாக்க வேண்டும் என்ற ஆசை மொபைல்களில் இலவசமாக பக்கங்களை தரக்கூடிய தளங்களில் இணைய உலகிற்கு சாகிர்வெப்(ZAKEERW@P ) மூலம் அறிமுகமாகி சுமார் ஐந்து இலட்சத்துக்கு மேல் ஹிட்களை பெற்று மேலும் பல பிறபல மொபைல் தரவிறக்க பக்கங்கள் கலக்கி வந்தேன். என் அண்ணாவின் நண்பன் மூலம் எச்.டீ.எம்.எல் (HTML) மொழியை கொஞ்சம் அறிந்து Geocities, freewebs, tripod, webs  போன்ற தலங்களில் ஆங்கிலத்தில் பக்கங்களை உருவாக்கி இருகிறேன்.

ஒருநாள் பேஸ்புக்கில் உலவிக்கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவரின் வெற்றி எப்.எம் இணைப்பு முலம்  (அதற்கு முன் இலங்கையில் இப்படி ஒரு வானொலி சேவை இருப்பதே தெரியாது)  அதில் இருந்த எ.ஆர்.வி.லோசன்( எனக்கு விருப்பமான் அறிவிப்பாளர்) மற்றும் ஹிசாம் (எனது பிரத்தியேக வகுப்பு நண்பர்) பதிவுகளை பார்த்து நாமளும் தமிழில் பதிவு எழுத வேண்டும் என்ற ஆசை மனதிற்குள் உருவானது. ஆனால் தமிழ் சாரலமாக எழுதவராதது மற்றும் தமிழ் தட்டச்சு சரியாக தெரியாமை எனக்கு தடையாக அமைந்தது.

ஒரு நாள் நன்பர் முபாரக்கின் அறைக்கு சென்ற போது அவர் ” ஹாய் அரும்பாவூர்” எனும் பதிவு எழுத ஆரம்பித்திருப்பது தெரியவந்தது. அப்போதுதான் ஆஹா நாமும் ஆரம்பித்தால் என்ன என்று அவர் மூலம் குகுள் தட்டச்சு முறையை அறிந்து பதிவு இட ஆரம்பித்தேன்.

2.முதல் பதிவை பற்றி ?

ஆரம்பம் என்பதால் எதை எழுதுவது என்று தெரியாமல் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய ஒரு கவிதையை முதல் பதிவாவாக (வாசிக்க ) இட்டேன்.

3.முதல் பாராட்டு

எனது நான்காவது பதிவிலே எனக்கு முதலாவது பின்னுட்டம் இட்டவர் பி.சிவா, எனது ஏழாவது பதிவில் முதல் பாராட்டு இல்லை வாழ்த்தை தெரிவித்தவர் (நிகழ்காலத்தில் ) பெயர் தெரியாதவர்.

4.பின்னுட்டம் வாக்களிப்பு எதற்கு முன்னுரிமை ?

இரண்டுக்கும் சமமான உரிமை தான். மூட் வந்தால் வாக்களிப்பேன். பின்னுட்டம் இடுவது மிக குறைவு. பின்னுட்டம் இடுவதில் உள்ள சோம்பெரித்தனமும நேரமின்மையும்  இதற்கு காரணம். பதிவுலக நண்பர்களே மன்னிக்க வேண்டும். இனியாவது முயற்சிக்கிறேன்.

5.வலைபதிவை பிரபலம் ஆக்க என்ன செய்வீர்கள் ?

தமிலிஷ், தமிழ் 10 , உலவு, நிவ்ஸ் பானை, தமிழ் மனம், பூச்சாரம், யாழ்தேவி போன்றவற்றில் பதிவுகளை இணைப்பேன் மற்றும் பேஸ்புக் மூலம் நண்பர்களுடன் பகிர்வேன்.

6.நண்பர்களின் ஆதரவு உள்ளதா ?

ஹும்.. கொஞ்சம் உள்ளது.
இன்னும் தேவை. ( உருப்படியான பதிவு இட்டால தானே ஆதரவு கிடைக்கும்)

7.உங்களுக்கு பிடித்த பதிவர்?

நிறையப்பேர் உள்ளனர் ஒருசிலரை குறிப்பிட்டால் நீங்களெல்லாம் கோபிப்பிர்கள்.

8.வலைபதிவு வந்த பின்பு ஏதும் மாற்றம் ?

அதிகம் எழுத வேண்டுமென்ற ஆசை இருந்தது ,
ஆனால் இப்போது கொஞ்சம் குறைவு !!!

9.பதிவுலகில் வந்த பின்பு நண்பர்களின் வட்டம் அதிகம் ஆகி உள்ளதா ?

இருந்தது, எனது தொடர்புகளை ரகசியமாக வைத்திருந்ததால் மிக குறைவு என நினைக்கிறேன்.
பேஸ்புக்கில் தொடர்புகொள்ள  இங்கே அழுத்தவும்.

10.மற்ற வலைபதிவு நண்பர்களுக்கு ஏதும் கருத்து ?

உண்மையை உண்மையாக எழுதுங்கள்.
உங்களது ஆதரவை எனக்கும் மறக்காமல் தரவும்.
.

.

Friday, July 23, 2010

இலங்கையில் உலக முடிவு " ஹோர்டன் பிலைஸ்" அழகிய காட்சிகள்- பகுதி 2



இயற்கையை ரசிக்காத மனிதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்...
இயற்கையை பார்த்து
இறைவனின் படைப்பாற்றலை சிந்தித்து விளங்குவோமாக..

இலங்கையில் உலக முடிவு " ஹோர்டன் பிலைஸ்" அழகிய காட்சிகள்- பகுதி 1 பார்க்க இங்கே அழுத்தவும்.

 .
.
.

Wednesday, July 21, 2010

மாயாஜால "மாஜிக்" பந்துவீச்சாளர் முரளி !!!


மாயாஜால மாஜிக் பந்துவீச்சாளர், உலக சுழல்பந்து நாயகர், தூஸ்ராவை கிரிக்கட் உலகிற்கு அறிமுகம் செய்தவர், உலகின் அதிகூடிய ஒருநாள் மற்றும் டெஸ்ட் விக்கட்டுக்களை வீழ்த்தியவர், சிரித்த முகமுடையவர், உலக கிரிக்கட் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படுபவர், நன்னடத்தையுடையவர், சிரிப்போடு துடுப்பெடுத்தாடுபவர், தலைவராக இருக்க வேண்டியவர் தற்போதய உப தலைவர் உலக டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெறுவது கவலையாக இருந்தாளும், இளைய வீரர்களுக்கு சந்தர்பம் அளிப்பதே தனது ஒய்வுகுரிய ஒரு காரணமாக சொன்னது இவரது பெருந்தன்மையையும் தன்னலமற்ற தன்மையையும் எடுத்து காட்டுகிறது.


இலங்கையின் மத்திய மலைநாடாம் இயற்கை எழில்மிக்க கண்டி மாவட்டத்தில் பிறந்த முரளிதரன்( நமட ஊரும் அதுதான்) கண்டி அன்தனிஸ் கல்லூரியில் கிரிக்கட்டிற்கு காலடி வைத்து தமிழ் யூனியன், கண்டுரட்ட, இலங்கை, ஆசிய பத்நோருவர், உலக பதினொருவர், சென்னை சுப்பர் கிங்க்ஸ் மற்றும் இங்கிலாந்து கவ்ண்டி அணிகளான கெண்ட், லென்கர்செயார் அணிகளுக்காக விளையாடிக்கொண்டிருக்கிறார்.

132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் இதுவரைக்கும் 798 சர்வேதேச விக்கட்டுகளையும் துடுப்பாட்டத்தில் ஒரு அறைசதமடங்களாக 1784 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.


இவர் தனது கண்ணி டெஸ்டை 1992 ஆம் ஆண்டு ஆர.பிரேமதாச மைதானத்தில் அவுச்தேரிலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதில் அவர் அவுஸ்த்ரேலிய அணியின் மேக்டோமர்ட்டை தனது கண்ணி டெஸ்ட் விக்கட்டாக கைப்பற்றினார். தற்போது காலியில் இந்திய அணிக்கெதிராக நடைபெறுகின்ற முதலாவது டெஸ்டில் ஒய்வுபெருகிறார். இவரது இறுதி 800 விக்கட்டாக யார் அமையப் போகிறார்களோ.. பொறுத்திருந்து பாப்போம்.. நான்காவது நாள் கடைசியாக ஆட்டமில்ந்தவர் யுவராஜ் சிங்.


முரளியின் சாதனை எட்டமுடியாத சாதனையாக இருக்குமென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவருக்கு அடுத்தபடியாக அதிகூடிய டெஸ்ட் விக்கட்டுக்களை வீழ்த்திய பதிநேல்வரும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில்லை, விளையாடப்போவதும் இல்லை 19 வது இடத்தில் 355 விக்கட்டுகளை வீழ்த்தி விளையாடிக்கொண்டிருக்கும் ஹர்பஜன் சிங்கிற்கு எட்டாக்கரையாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

முரளி சர்வதேச கிரிக்கட்டில் மறக்க முடியாத ஒரு சின்னம் !!!

இன்னும் எழுத வேண்டுமென்று ஆசைதான் ஆனால் நேரம்...................

பிற்குறிப்பு.
முரளி   800 வது விக்கட்டாக ஓஜாவை வீழ்த்தினார்.

முற்பதிவு செய்ய வேண்டாம்...



இறைவன் மனிதனை படைத்து அவர்களுக்கு தேவையான இயற்கையை சரி சமமாகவே படைத்துள்ளான். அதிலும் ஒவ்வொரு மனிதனுக்குமுல்ள்ள அறிவு, திறமை, ஆற்றல் மற்றும் இயலுமைகளினால் ஏற்ரத்தாழ்வாக வளங்கள் அமைந்துள்ளது.
சுற்றிவளைத்து வரமால் விடையத்திற்கு நேரடியாக வருகிறேன். இன்றையகாலத்தில் முற்பதிவுமுறையினால் பஸ் வண்டிக்கு, ரயிலுக்கு, திரையரங்குகளுக்கு, விளையாட்டு போட்டி டிக்கட்டுகளுக்கு, உற்பத்தி பொருட்களுக்கு  எல்லாம் முற்பதிவு செய்கின்ற மனிதன் எல்லோருக்கும் பொதுவான விடயங்களுக்கும் முற்பதிவு செய்ய முற்படுகின்றான்.

நேரடியாக விடயத்திற்கு வருகின்றேன். துபையில் இருக்கின்ற எனது நண்பரின் அனுபவம். துபாயில் நிருவனக்களால் இலவசமாக கொடுக்கப்படுகின்ற வசிப்பிடங்களில் பத்து அரைகளுக்கு முன்று அல்லது நான்கு குளியலரைகளே உள்ளதாம். அதில் சிலர் குளியலரைகுக்குள் தமது துடைப்பாய் மற்றும் வாளிகளை வைத்து முற்பதுவு செய்துவிட்டு தமது மற்றைய கரியங்கலான பல் துவக்குவது மற்றும் இன்னோரன்ன காரியங்களை செய்துவிட்டு வரும் வரை மற்றையவர்கள் காத்திருக்க வெண்டுமாம். சில முற்கோபக்காரர்கள் கொதித்தெளுவதும் சண்டை சச்சரவுகளும் காலை பொழுதில் ஏற்படுமாம்.
இது என்ன மனித இயல்பு. மற்றவர்களை பற்றி சிந்திக்காமல் சுயநலம் கொண்ட இவர்கள் பொதுவிடயங்களையும் முற்பதிவு செய்யமுற்படுகின்றார்கள். இப்படியானவர்களால் தான் தெருவுக்கு, ஊருக்கு, நகருக்கு, நாட்டுகென்று பல பிரச்சினைகள்.
முற்பதிவு என்பது எதற்கு செய்யவேடுமோ அதற்கு செய்ய வேண்டும் அதைவிடுத்து இறைவனால் இயற்கையாக கொடுக்கபட்டவைக்கும், பொது இடங்களிலும் முற்பதிவு செய்யாமல்
மற்ரையவர்கலின் உணர்வு மற்றும் தேவைகளை மதித்து செயற்படுவோமாக.



Sunday, July 4, 2010

உடற்பயிற்சி செய்வோம்...



நோயற்ற வாழ்வு என்னும் குறைவற்ற செல்வத்தைப் பெறுவது இப்போது மிகவும் அரிதாகிவிட்டது. சத்தில்லா உணவு, சுகாதாரமற்ற வாழ்விடம் எனப் பல்வேறு காரணங்களுக்கிடையே ஆரோக்கியமற்ற வாழ்வுக்கு உடற்பயிற்சிப் புறக்கணிப்பும் முக்கியக் காரணம்.

"வாழ்நாள் முழுவதும் மருத்துவரிடம் செல்லாமல் இருக்க ஒரு மருந்து சொல்லுங்கள்' என்றால் உடனே உடற்பயிற்சி என்று சொல்லி விடலாம். ஆனால், கண்கெட்ட பின்பு சூரியநமஸ்காரம் என்பதைப் போல நோய்களின் ஆதிக்கம் உடலில் அரங்கேறிய பின்புதான் கசக்கும் மருந்துகளுடன், வியர்க்கும் உடற்பயிற்சியின் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்புகிறார்கள் பலர்.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை உடற்பயிற்சிக்காகத் தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. ஏனென்றால், எந்திரங்களின் பயன்பாடு குறைந்திருந்த அந்தக் காலத்தில் தொழில் முதல் விவசாயம் வரை அனைத்துக்கும் உடல் உழைப்பே பிரதானம். உணவுக்காக உழைக்கும்போதே உடற்பயிற்சியும் கிடைக்கப்பெற்று ஆரோக்கியம் பெருகியது. ஆறுகளின் தேன்சுவை நீருக்கும், தென்றல் உறவாடும் காற்றுக்கும் இப்போதைய நகரங்களில்கூட அன்று தட்டுப்பாடில்லை. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தாமல் எந்த வேலையையும் முடிக்க முடியாது என்பதால் உடலும் அதற்கேற்ப வளைக்கப்பட்டது.

இதனுடன் "வீரம்' என்னும் போதையூட்டி இளைஞர்களுக்கு சிலம்பம், வாள்வீச்சு போன்ற வழிகளிலும் உடல் மேலும் வலுவூட்டப்பட்டது. சில பகுதிகளில் பல கிலோ எடை கொண்ட "திருமண கல்'என்ற கல்லை தூக்கிப் போட்டால் மட்டுமே பெண் கொடுக்கும் வழக்கம் கூட இருந்தது. காலத்தின் வேகத்தில் அறிவியல் கடவுளின் வரத்தால் ஏராளமான இயந்திரங்கள் பெருகி விட்டன. இன்று படுக்கையில் இருந்தபடியே வீட்டுக் கதவுகளை "ரிமோட் கன்ட்ரோல்' மூலம் திறந்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உடற்பயிற்சி வெகுதூரத்துக்குச் சென்றுவிட்டது.

கணினியோடு உறவாடி உழைக்கும் இன்றைய பல இளைஞர்களின் கைகள் கூட மகளிரைப் போல மென்மையாகிவிட்டது என்பதே உண்மை. கருப்பட்டியையும், கம்பஞ்சோற்றையும் அருங்காட்சியகத்தில் இருக்கும் உணவுப் பொருளாகப் புறந்தள்ளிவிட்டு, துரித உணவுகளால் வயிற்றை நிரப்பிக் கொள்ளும் இளைஞர்களை உடல் பருமனும், நோய்களும் எட்டிப்பிடிப்பது எளிதாகி வருகிறது. இராணுவம், பொலிஸ் போன்ற பணிகளுக்குச் சென்றால் மட்டுமே கட்டான உடல்வாகு தேவை என்பதும், படிப்பு, பணிகளுக்காக உடற்பயிற்சியை மறப்பதும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. பொலிவான முகத் தோற்றத்துக்காக பலவித "க்ரீம்'களை வாங்க பணத்தில் தாராளம் காட்டும் வேளையில், உடலை மிடுக்காக்கி ஆரோக்கியத்தைப் பரிசளிக்கும் உடற்பயிற்சிகளுக்காகச் செலவிட மட்டும் தயக்கம் காட்டுவது தவறானதாகும்.

இளைஞர்கள் உடற்பயிற்சிக்கு ஓய்வளிக்கும் போக்கு உகந்ததல்ல. உடற்பயிற்சியின் உன்னதத்தை சிறுவயது வகுப்புகளிலேயே அறிந்திருந்தும் அதன்பக்கம் புறமுதுகிடுவதால்தான் ஆரோக்கியத்துக்காக மருந்தகங்களில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகள் முதல் மேல்நிலைக் கல்வி வரை வாரத்தில் ஒருசில மணி நேரம் மட்டுமே விளையாட்டுப் பாடவேளையாக உள்ளது. இந்நேரத்திலும் சில ஆசிரியர்கள் தமது பாடத்தைப் படிக்க ரகசிய உத்தரவுகளைப் பிறப்பிப்பதும் உண்டு. அனைத்து மாணவர்களும் ஏதேனும் ஒரு விளையாட்டு அணியில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று வற்புறுத்தல் இல்லை. இதனால் விளையாட்டுப் பாடவேளையை வெட்டிக்கதை நேரமாக மைதானத்தில் மண்ணில் கோலமிட்டு கழிக்கும் மாணவர்கள் ஏராளம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பர். அந்தப் பழமொழிக்கு ஏற்ப பள்ளிப் பருவத்திலேயே விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியைக் கட்டாயப்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்களுக்குத் தினந்தோறும் மாலை இறுதி பாடவேளையை விளையாட்டுக்காக ஒதுக்க வேண்டும். இந்த நேரத்தில் சிலம்பம், அந்நிய நாட்டு வரவான கராத்தே உட்பட உடற்பயிற்சியோடு தொடர்புடைய வீர விளையாட்டுகளைச் சேர்ப்பது தவறில்லை. அரசுப் பணிகளில் சேருவதற்கு விளையாட்டுச் சான்றிதழ்களின் அவசியத்தை அதிகப்படுத்த வேண்டும். உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்பட சுகாதாரத் துறையினர் புதிய யுக்திகளை சிந்தித்து செயற்படுத்த வேண்டும்.



உடற்பயிற்சி செய்வதற்கு உடற்பயிற்சி சாதனங்கள் கட்டாயம் என்று அவசியமில்லை.  குறிப்பிட்ட துரம் ஓடுவது, குறிப்பிட்டளவு குனிந்து எழுவது என்று எத்தனையோ உடற்பயிற்சிகள் இருக்கின்றன. இவற்றில் குரைந்தது ஒரு சிலதையாவது செய்வதன் மூலம் உடலை கட்டமைப்பாக வைத்திருப்பதுடன் ஆரோக்கியமாக வாழலாம்.


உடற்பயிற்சி அவசியம்.....
நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம்
நோய் வருமுன் காப்போம்..


உங்கள் கருத்துக்களையும்பகிரவும்
நன்றி.

Friday, July 2, 2010

தொழுகையின் முக்கியத்துவம்

அன்புச்சகோதர சகோதரிகளே!

அல்லாஹ் மனிதனைப்படைத்து அம்மனிதனுக்கு பல வணக்கங்களை கடமையாக்கி ''அவ்வணக்கங்களை எந்த அளவுக்கு மனிதன் நிறைவேற்றுகின்றான்'' என்பதை நோட்டமிடுகின்றான். தொழுகை அக்கடமைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆகவே தொழுகையின் முக்கியத்துவத்தை தெரிந்து அதை நிறைவேற்றுவது ஒவ்வொரு முஸ்லிமான வயது வந்த ஆண் பெண் இருபாலர் மீதும் கடமையாகும். தொழுகையில் 5 விஷயங்களை கடைப்பிடிப்பது மிக முக்கியமானதாகும்.

1. அல்லாஹுவுக்காக (தூய எண்ணத்துடன்) தொழுவது.

2. நபியவர்கள் தொழுததைப் போல் தொழுவது.

3. தொழுகையின் முக்கியத்துவம்.

4. உரிய நேரங்களில் கடமையான தொழுகைகளை தொழுவது.

5. ஆண்கள் ஐமாஅத்தோடு தொழுவது.

அல்லாஹுவுக்காக தொழுவது
அல்லாஹ்விடத்தில் நமது அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இரண்டு நிபந்தனைகள் அவசியமாகும்.

1. இக்லாஸ் (தூய எண்ணம்)

2. நபி வழி

அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.

எவர் தன் இரட்சகனை சந்திக்க ஆதரவு வைக்கின்றாரோ, அவர் நற்கருமங்களைச் செய்யவும், தன் இரட்சகனின் வணக்கத்தில், அவர் எவரையும் இணையாக்க வேண்டாம். (18:110)

இந்த ஆயத்தில் வந்திருக்கும் நற்கருமம் என்பதற்கு இக்லாஸ் என்பது பொருள், இணை என்பதற்கு மனத்தூய்மை என்பது பொருளாகும். இந்தக் கருத்தையே இப்னு கதீர் (ரஹி) அவர்கள் தனது தஃப்ஸீரில் விளக்கமழிக்கின்றார்கள்.

செயல்கள் அனைத்தும் எண்ணங்களபை; பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

ஆகவே, நாம் அல்லாஹ்வுக்காகவே தொழ வேண்டும்.

நபியவர்கள் தொழுததைப் போல் தொழுவது கடமையாகும்
1. என்னை எப்படி தொழக்கண்டடீர்களோ அதே போல் நீங்களும் தொழுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

நபியவர்கள் தொழுததைப்போல் நாமும் தொழ வேண்டும். யார் நபியவர்கள் கற்றுத்தந்த தொழுகைக்கு மாற்றமாக தொழுகின்றாரோ அது அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது, ஒரு நாள் ஒரு நபித்தோழர் பள்ளியில் தொழுது விட்டு வரும்போது (அவரைப்பார்த்த நபியவர்கள்) உங்களின் தொழுகை சேராது திரும்பிச் சென்று தொழுங்கள் என அத்தோழருக்குக் கூறினார்கள், அவர் இரண்டாவது முறை தொழுது விட்டு வந்தார் நபியவர்கள் அதே போன்றே கூறினார்கள், அவர் மூன்றாவது முறையும் தொழுது விட்டு வந்தார் நபியவர்கள் அதே போன்று மீண்டும் கூறினார்கள், அப்போது அந்த நபித்தோழர் அல்லாஹ்வின் தூதரே! இதைவிட சிறந்த முறையில் தொழத் தெரியாது, தொழும் முறையை எனக்கு கற்றுக் கொடுங்கள் என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழருக்கு தொழும் முறையை கற்றுக்கொடுத்தார்கள். நபித்தோழருக்கே இந்த நிலை என்றால், நமது நிலை என்ன? நம் தொழுகைகள் நபியவர்களின் தொழுகையைப்போல் இருக்கின்றதா? இல்லையா? என்பதை ஒரே ஒரு முறையாவது பரிசீலனை செய்து பார்க்கக்கூடாதா? ஆகவே நீங்கள் தொழும் தொழுகைகள் நபியவர்கள் கற்றுத்தந்த தொழுகையைப்போல் இருக்கின்றதா? என்பதை பரிசீலணை செய்து கொள்ளுங்கள். நபியவர்களின் தொழுகையை விபரமாக கூறுவதற்கு இங்கு முடியாத காரணத்தினால் அதை விபரமாக எழுதப்பட்ட புத்தகங்களில் படித்து நபியவர்கள் தொழுததைப்போல் தொழப் பழகிக்கொள்ளுங்கள்.

தொழுகையின் முக்கியத்துவம்
1. (நபியே! யுத்த முனையில்) நீரும் அவர்களுடன் இருந்து அவர்களுக்கு நீர் தொழவைக்க (இமாமாக முன்) நின்றால், அவர்களின் ஒரு பிரிவினர் (தொழ) நிற்கட்டும், மேலும் தங்களுடைய ஆயுதங்களை அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். உம்முடன் இவர்கள் ஸஜ்தா செய்து முடிந்து விட்டால் அவர்கள் (அணியிலிருந்து விலகி) உங்கள் பின்புறம் (உங்களைக்காத்து) நிற்கவும், (அது சமயம்) தொழாமலிருந்த மற்றொரு கூட்டத்தினர் வந்து உம்முடன் (சேர்ந்து) தொழவும், (ஏனென்றால்) நீங்கள் உங்கள் பொருட்களிலிருந்தும், உங்கள் ஆயுதங்களிலிருந்தும் கவனக்குறைவாக இருந்து விட்டால், உங்கள் மீது ஒரேயடியாகச்சாய்ந்து தாக்க வேண்டுமென்று அந்நிராகரிப்போர் விரும்புகின்றனர். (4:102)

2. இஸ்லாத்தின் கடமைகள் ஜந்து , அல்லாஹ்வைத்தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவது., தொழுகையை நிறைவேற்றுவது, நோன்பு நோற்பது. ஸக்காத் கொடுப்பது, ஹஐ; செய்வது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( புகாரி, முஸ்லிம்)

3. நாளை மறுமையில் தொழுகையைப்பற்றித்;தான் ஓர் அடியானிடத்தில் முதலில் விசாரிக்கப்படும், அது சரியாக இருந்தால் மற்ற எல்லா வணக்கங்களும் சரியாக இருக்கும், அது தவறாக இருந்தால் மற்ற எல்லா வணக்கங்களும் தவறாக இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தப்ரானி)

தொழுகையை நிறைவேற்றுவது சுவர்க்கம் செல்வதற்கு மிக முக்கிய காரணமாகும்

இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகைகளைப் பேணுவார்கள். இத்தகையோர்தாம் (சுவர்க்கத்தை) அனந்தரம் கொள்பவர்கள், இவர்கள் எத்தகையோரென்றால் ஃபிர்தௌஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரமாக கொள்வார்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள். (23:9-11)

தொழுகையை விடுவது பெரும் குற்றமாகும்
1. நிச்சயமாக ஒரு மனிதனுக்கும்; குஃப்ருக்கும் மத்தியிலுள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதுதான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

2. எங்களுக்கும் அவர்களுக்கும் (காஃபிர்களுக்கும்) மத்தியிலுள்ள உடன்படிக்கை தொழுகைதான். அதை (தொழுகையை) யார் விட்டுவிடுகின்றாரோ நிச்சயமாக அவர் காஃபிராகிவிட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

3. தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. (திர்மிதி)

தொழுகையை விடுவது நரகம் செல்வதற்கு முக்கிய காரணமாகும்
1. சுவனவாசிகள் குற்றவாளிகளிடம் கேட்பார்கள் உங்களை ஸகர் என்ற நரகத்தில் நுழையவைத்தது எது? (என்று) தற்கவர்கள், தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை என்று கூறுவார்கள். (74:40-43)

2. இவர்களுக்குப் பின்னர் (வழிகெட்ட) தீய பின் தோன்றல்கள் இவர்களுடைய இடத்தை அடைந்தார்கள், தொழுகையை(த் தொழாது) வீணாக்கினார்கள், மனோ இச்சைகளையும் பின்பற்றினார்கள், ஆகவே அவர்கள் (மறுமையில்) பெரும் தீமையைச் சந்திப்பார்கள். (19:59)

3. யார் தொழுகையைப் பேணித் (தொழுகின்றாரோ) அது அவருக்கு மறுமையில் ஒளியாகவும், அத்தாட்சியாகவும், பாதுகாக்கக் கூடியதாகவும் ஆகிவிடும். யார் அதை பாதுகாத்துத் தொழ வில்லையோ, அது அவருக்கு ஒளியாகவோ, அத்தாட்சியாகவோ, பாதுகாப்பாகவோ இருக்காது. இன்னும் அவன் மறுமையில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபை இப்னு கலஃப் போன்றவர்களோடு எழுப்பப்படுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், தப்ரானி)


கடமையான ஒவ்வொரு தொழுகைகளையும் உரிய நேரத்தில் தொழுவது அவசியமாகும்
1. நிச்சயமாக, தொழுகை விசுவாசிகளின் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கின்றது. (4:103)

2. அல்லாஹ்விடத்தில் மிக விருப்பமான அமல் எது என்று நான் நபி (ஸல்) அவர்களிடம்; கேட்டேன், தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் - அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது Ê ஆதாரம் - புகாரி

ஆண்கள் ஐமாஅத்தோடு தொழுவதும் மிக முக்கியமானதாகும்
1. நபி (ஸல்) அவர்களிடம் கண்தெரியாத ஒரு மனிதர் வந்து அல்லாஹுவின் தூதரே! என்னை பள்ளிக்கு அழைத்து

வருவதற்கு யாருமில்லை (என்று சொல்லி) வீட்டில் (தனிமையில்) தொழுவதற்கு அனுமதி கேட்டார், நபியவர்களும் அனுமதி கொடுத்து விட்டார்கள். அந்த மனிதர் திரும்பிச் செல்லும் போது அவரை அழைத்து பாங்கு சப்தம் கேட்கின்றதா? என வினவினார்கள், அதற்கு அவர் ஆம் என்றார். அப்படியானால் தொழுகைக்கு, (பள்ளிக்கு) கண்டிப்பாக வரவேண்டும் என்றார்கள். (முஸ்லிம்)

2. ஜமாஅத்தோடு தொழும் தொழுகை தனிமையில் தொழும் தொழுகையை விட இருபத்தி ஏழு மடங்கு சிறந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

3. தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு தொழுகையை தொழுவிப்பதற்காக ஒருவரை ஏற்படுத்திவிட்டு தொழுகைக்கு வராதவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் வீடுகளை எரித்து விடலாமென நான் முடிவு செய்தேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)

அன்புள்ள சகோதர சகோதரிகளே!

''தொழுகை எவ்வளவு முக்கியமான வணக்கம்'' என்பதைத் தெரிந்து கொண்டீர்களா! ஒருவர் முஸ்லிமா? இல்லையா? என்பதை பிரித்தறிவிக்கக்கூடிய ஒரே ஒரு வணக்கம், தொழுகைதான். வயது வந்த புத்தியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஒவ்வொரு நாளும் ஐந்து நேரம்

தொழுவது கட்டாயக் கடமையாகும். நோன்பு, ஸக்காத், ஹஜ் போன்ற வணக்கங்கள் இஸ்லாத்தின் அடிப்படைக்கடமைகளில் ஒன்றாக இருந்தாலும் அவைகளில் சில சலுகைகளும் விதிவிலக்குகளும் உள்ளன. வசதியில்லாதவர்களுக்கு ஸக்காத் கொடுப்பது. ஹஜ் செய்வது கடமையில்லை, உடம்பில் சக்தியில்லாதவர்கள் நோன்பு நோற்பது கடமையில்லை, ஆனால் ''தொழுகையை விடுவதற்கு புத்தியுள்ள வயது வந்த'' எந்த முஸ்லிமுக்கும் எப்படிப்பட்ட நேரத்திலும் அனுமதியில்லை. நின்றுகொண்டு தொழ முடியாவிட்டால் இருந்துகொண்டு தொழ வேண்டும், இருந்துகொண்டு தொழ முடியாவிட்டால் சாய்ந்து கொண்டு தொழ வேண்டும். தண்ணீர் கிடைக்கா விட்டால் அல்லது ''தண்ணீர் கிடைத்தும்; அதைக்கொண்டு உளு செய்ய முடியா விட்டால்'' தயம்மம் செய்து கொண்டு தொழ வேண்டும். இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காக எதிரிகளோடு யுத்தம் செய்யும் நேரத்தில் கூட தொழுகையை விடுவதற்கு அனுமதியில்லையென்றால் இதைவிட கஷ்டமான நேரத்தை நம் வாழ்வில் சந்திக்க வாய்ப்பிருக்கின்றதா? யார் தொழுகையை வேண்டுமென்று விட்டுவிடுகின்றாரோ அவர் இஸ்லாத்தை விட்டே வெளியாகிவிடுவார் என்பதை மேலே கூறப்பட்ட ஹதீஸுகளிலிருந்து தெரிந்து கொண்டோம், நாளை மறுமையில் சுவர்க்கவாதிகள் நரகவாதிகளிடம் உங்களை இறைவன் நரகத்தில் வேதனை செய்வதற்குரிய காரணம் என்ன? என கேட்பார்கள். அதற்கவர்கள்; நாங்கள் தொழவில்லை என விடையளிப்பார்கள். நாளை மறுமையில் நரகம் செல்வதற்கு முதல் காரணமே தொழுகையை விடுவதுதான். அல்லாஹ் நம் அனைவரையும் நரக வேதனையிலிருந்து பாதுகாப்பானாக. தொழுகை எவ்வளவு முக்கியமான வணக்கம் என்பதைத் தெரிந்து கொண்டீர்களா? இனிமேல் ஐங்காலத் தொழுகைகளை தொழுதே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருப்பீர்கள் என்று உறுதியாக நான் நம்புகின்றேன்.

அந்த முடிவு மாத்திரம் போதாது, ஐங்காலத் தொழுகையை தொழுவது எப்படி கடமையோ அதே போல் ஒவ்வொரு தொழுகைகளையும் அதன் அதன் நேரங்களில் தொழுவதும் கடமைதான். எந்த இறைவன் தொழுகைகளை கடமையாக்கினானோ அதே இறைவன்தான் ஒவ்வொரு தொழுகைகளுக்கும் குறிப்பிட்ட நேரங்களையும் கடமையாக்கியிருக்கின்றான், தொழுகை கடமையாக்கப்பட்ட முதலாம் நாளும் இரண்டாம் நாளும் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஒவ்வொரு தொழுகையின் ஆரம்ப நேரத்தையும் முடிவையும் கற்றுக்கொடுத்துவிட்டு ஒவ்வொரு தொழுகையையும் இவற்றிற்கு இடைப்பட்ட (அதற்குரிய) நேரங்களில் தொழ வேண்டும் எனவும் கூறினார்கள்;. இன்று முஸ்லிம்களில் பலர் இரண்டு மூன்று தொழுகைகளை ஒரே நேரத்தில் சேர்த்து சர்வ சாதாரணமாகத் தொழுதுவிடுகின்றார்கள், இது முற்றிலும் தவறானது, நினைத்த நேரங்களில் தொழலாம் என்றிருந்தால் அல்லாஹ் ஒவ்வொரு தொழுகைக்கும் நேரம் குறிப்பிட்டிருப்பது அர்த்தமற்றதாகி விடுகிறதே! அல்லாஹ் உரிய ஒரு நேரத்தில் ஒரு தொழுகையைத்தான் தொழச் சொல்லுகின்றான் நாம் அதை நாம் விரும்பும் வேறு ஒரு நேரத்தில் தொழுதால் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவர்களாகுவோமா? எப்படி ஒரு தொழுகையை அதன் நேரம் வருவதற்கு முன் தொழுதால் கூடாதோ, அதேபோல் அத்தொழுகைக்குரிய நேரம் முடிந்ததற்குப் பிறகு தொழுவதும் கூடாது.

ஆகவே ஒவ்வொரு தொழுகையையும் அதனதன் நேரங்களில் தொழுது கொள்வதோடு, அதன் ஆரம்ப நேரத்தில் தொழுது கொள்ளவும் வேண்டும். இது அமல்களில் மிகச்சிறந்த அமலாகும். இதே போல் ஒவ்வொரு தொழுகையையும் ஜமாஅத்தோடு சேர்ந்து தொழவேண்டும், யுத்த நேரத்தில்கூட ஜமாஅத்தோடு தொழும்படி நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். நபியவர்கள் நடக்க முடியாத அளவுக்கு கடுமையான நோயுற்றிருந்தும் இரண்டு தோழர்களின் உதவியோடு ஜமாஅத் தொழுகையில் சேர்வதற்காக பள்ளிக்குச் சென்றார்கள். இரு கண்களும் தெரியாத ஒரு நபித்தோழர் வீட்டில் தொழுவதற்கு நபியவர்களிடம் அனுமதி கேட்ட போது பாங்கு சத்தம் கேட்டால் ஜமாஅத்தோடுதான் பள்ளியில் தொழ வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த அளவுக்கு முக்கியமான ஒன்றுதான் ஜமாஅத்தோடு சேர்ந்து தொழும் தொழுகை.

தொழுகைகளை உரிய முறையில் பேணித் தொழுதவர்களாக வாழ்ந்து மரணிக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக...

Tuesday, June 29, 2010

ஆசிய வீரர்களின் ஹாட்ரிக் சாதனைகள்..

கிரிக்கட் போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை பெறுவது இலகுவானது அல்ல அதுவும் கிரிக்கட் போட்டிகளில் அடிக்கடி காணமுடியாத சாதனை, இதற்கு திறமை, நுணுக்கம், அதிஷ்டம் இருக்க வேண்டும்.


சர்வதேச  கிரிக்கட் வரலாற்றில் இதுவரைக்கும் 65 ஹாட்ரிக் சாதனைகள் பெறப்பட்டுள்ளன , அதில் டெஸ்ட் 37, ஒருநாள் 26. இருபதுக்கு2௦ ல் 2 ஹாற்றிக்கள் பெறப்பட்டுள்ளன.

ஒருநாள் போட்டிகளில் அதிக ஹாற்றிக் சாதனைகள் நிகழ்த்தி இருப்பவர்கள் இங்கிலாந்து வீர்கள், அதற்கு அடுத்தபடியாக அவுசஸ்தேரேலிய வீர்கள். ஆசிய வீரர்கள் வெறும் 8 ஹாட்ரிக்  சாதனைகளையே நிகழ்த்தியுள்ளனர். அதிலும் வாசிம் அகரம் இரண்டு தடவை, முஹம்ர்ட் சமி, அப்துர் ரசாக் உட்பட மூன்று பேரும், ஹர்பஜன் சிங், இர்பான் பதான் உட்பட இரண்டு இந்திய வீரர்களும், நுவான் சொய்சா , .அலோக் கபாலி உட்பட இலங்கை, பங்களாதேஷ் வீரர்கள் ஹாட்ரிக் சாதனை பெற்றுள்ளனர்.


டெஸ்ட் போட்டியில் கடைசியாக ஹாட்ரிக் சாதனை  பெற்றவர் இங்கிலாந்து அணியின் ரியன் சைட் போட்டம் இவர் நியூசிலாந்து அணியுடன் 2008 ம் ஆண்டு பெற்றார்.


டெஸ்ட் போட்டி மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்



ஒருநாள் போட்டிகளில் இதுவரை மொத்தமாக 26 ஹாட்ரிக் சாதனைகளில் 15 ஹாட்ரிக்களை ஆசிய வீரர்களே பெற்றுள்ளனர். இதில் 8 ஹெற்றிக்களை பாகிஸ்தானிய வீரர்களும், மொஹம்மத் பர்வேஸ் மகரூப், லசித் மாலிங்க, சமிந்த வாஸ் இரண்டு தடவைகள் உட்பட இலங்கை வீரர்கள் 4 தடவையும், கபில் தேவ் உட்பட இரண்டு இந்தியா , ஒரு பங்களாதேஷ் வீரரும் ஹாட்ரிக் சாதனை பெற்றுள்ளனர்.

ஒருநாள் போட்டியில் முதல் ஓவரில் முதல் மூன்று பந்தில் முதல் மூன்று விக்கட்டுகளையும் பெற்றவர்  இலங்கையின் சமிந்த வாஸ்
பங்களாதேஷுக்கு எதிராக உலக கிண்ண போட்டியில் ,

வீடியோ பார்க்க
ஒருநாள் போட்டியில் நான்கு பந்தில் நான்கு விக்கட்டுகளை கைபர்ரியவர் இலங்கையின் லசித் மாலிங்க. அதை இவர் இறுதியாக நடை பெற்ற உலக கிண்ண போட்டியில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக பெற்றார்.

வீடியோ பார்க்க
ஒருநாள் போட்டிகளில் அண்மையில் ஹாட்ரிக் பெற்றவர் இலங்கையின் பார்வீஸ் மகரூப் இவர் இந்திய அணிக்கு எதிராக ஆசிய கிண்ண போட்டியில் இதனை பெற்றார்.

வீடியோ பார்க்க
ஒருநாள் போட்டி மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்

இருவதுக்கு20 போட்டிகளில் சர்வதேச மட்டத்தில் 2 ஹாற்றிக்களே பெறப்பட்டுள்ளன. இவைகள் இரண்டும் ஜாகப் ஓரம், ப்ரெட் லீ நிவ்சிலாந்து, அவுச்தேரேலிய வீரர்கள் பெற்றவையாகும்.


இருவதுக்கு20 மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்.

ரொம்ப  சிரமப்பட்டு எழுதிய பதிவு. குறை நிறைகளை பின்னூட்டமிடவும்.