Tuesday, December 8, 2009

சீதனமா ? மஹரா ?


சீதனமென்பது பெண்வீட்டார் மாப்பிள்ளைக்கு கொடுக்கும் பணம் அல்லது, பணம் சார்ந்த சொத்துக்களகும். இது பெரும்பாலும் இந்துக்கலிடையே காணாப்படும் சம்பிரதயமாகும்.ஆனால் இது பொதுவாக எல்லா மதத்தவர்களினாலும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் முஸ்லீம்களை பொருத்தவரையில் சீதனம் என்பது கிடையது, ஆனலும் முஸ்லீம்களில் பெரும்பாலானோர் சீதனம் எடுத்தெ  வருகின்றனர்.

சீதனத்திற்கு மாறாக இஸ்லாமிய மார்கத்தில் ஆகுமாக்கப்பட்டிருப்பதுதான் மஹராகும். இது ஆண்களினால் பெண்களுக்கு பணமாகவோ பொருளாகவோ கொடுக்கப்ப்டுவதாகும்.


இனி நான் சொல்லப்போர விசயம் என்னவென்றால். இன்றைய காலத்தில் சீதனமென்ற கொடுமையினால் திருமணமுடிக்க முடியாமல் பெண்கள் கவலையுடன் கண்ணீர் வடித்துக்கொன்டும், சிலர் தப்பான வழியிலும் செல்கின்றனர்.

மாறக இஸ்லாமிய நாடான துபையில் மஹர் கொடுக்க முடியாமல் எத்தனையோ ஆண்கள் கவலையொடும், நாம் எப்போது திருமணம் முடிப்போம் என்ற ஏக்கத்துடனுமுள்ளனர்.

இது நான் அனுபபூர்வமக கேல்விப்பட்ட உண்மை.
நான் வேலை பார்கும் நிருவனத்தில் எங்களுக்கு குழு தலைவரக இருப்பவர் துபாய் நாட்டை சேர்ந்தவ்ர் வயது 32 அவர் அடிக்கடி எங்களை பார்த்து கேட்கக்கூடைய கேள்விதான்
திருமணமுடித்துவிட்டீர்களா?
திருமணமுடித்துவிட்டீர்களா?

ஏன் என்றால் அவருக்கு 32 வயதாகியும் திருமணமாகவில்லை காரணம் மஹர் கொடுமையாம். பெண்கள் அதிகமான மஹர் தொகை கேட்கிரார்கலாம்.
இது அவர்களை தப்பானவழிக்கு இட்டுச்செல்லும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.

என்ன நம்முடைய நாடுகலிள் சீதனக் கொடுமை, அறபு நாடுகலிள் மஹர் கொடுமையா?

ஆனல் இஸ்லாமிய மதம் மஹரை யாருக்கும் பாரமாக கொடுக்கவில்லை, இஸ்லாம் மதம் கூறுகிறது உன்களிடம் எது அதிகமாக  எவை காண்ப்படுகின்றதோ அதை மஹ்ராக கொடுக்கும்படி, உதரணத்திற்கு உங்களிடமிருக்கும் கல்வியையும் மஹராக கொடுக்கலாம்.

இதை பின்வரும் நபி மொழி சான்றுபகர்கிரது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நாயகத் தொழர் ஒருவர் மஹர் கொடுக்க வசதியே இல்லாதபோது அவருக்குத் தெரிந்த குர்ஆனின் சில அத்தியாயங்களை மணப்பெண்ணுக்குக் கற்றுக் கொடுப்பதையே மஹராக நிர்ணயித்தார்கள்.
 அறிவிப்பாளர்: ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி)
 ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
ஆண்கலே சீதனமில்லாமல் மஹர் கொடுத்து திருமணம் முடிப்போம்...

ச்மூகத்திலுள்ள ஏழை பெண்களையும் வாழ வைப்போம்.
..

தொடரும்...

உங்கள் கருத்துக்களை மறக்கமல் பின்னூட்டமிடவும்.

No comments:

Post a Comment