Wednesday, July 21, 2010

மாயாஜால "மாஜிக்" பந்துவீச்சாளர் முரளி !!!


மாயாஜால மாஜிக் பந்துவீச்சாளர், உலக சுழல்பந்து நாயகர், தூஸ்ராவை கிரிக்கட் உலகிற்கு அறிமுகம் செய்தவர், உலகின் அதிகூடிய ஒருநாள் மற்றும் டெஸ்ட் விக்கட்டுக்களை வீழ்த்தியவர், சிரித்த முகமுடையவர், உலக கிரிக்கட் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படுபவர், நன்னடத்தையுடையவர், சிரிப்போடு துடுப்பெடுத்தாடுபவர், தலைவராக இருக்க வேண்டியவர் தற்போதய உப தலைவர் உலக டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெறுவது கவலையாக இருந்தாளும், இளைய வீரர்களுக்கு சந்தர்பம் அளிப்பதே தனது ஒய்வுகுரிய ஒரு காரணமாக சொன்னது இவரது பெருந்தன்மையையும் தன்னலமற்ற தன்மையையும் எடுத்து காட்டுகிறது.


இலங்கையின் மத்திய மலைநாடாம் இயற்கை எழில்மிக்க கண்டி மாவட்டத்தில் பிறந்த முரளிதரன்( நமட ஊரும் அதுதான்) கண்டி அன்தனிஸ் கல்லூரியில் கிரிக்கட்டிற்கு காலடி வைத்து தமிழ் யூனியன், கண்டுரட்ட, இலங்கை, ஆசிய பத்நோருவர், உலக பதினொருவர், சென்னை சுப்பர் கிங்க்ஸ் மற்றும் இங்கிலாந்து கவ்ண்டி அணிகளான கெண்ட், லென்கர்செயார் அணிகளுக்காக விளையாடிக்கொண்டிருக்கிறார்.

132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் இதுவரைக்கும் 798 சர்வேதேச விக்கட்டுகளையும் துடுப்பாட்டத்தில் ஒரு அறைசதமடங்களாக 1784 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.


இவர் தனது கண்ணி டெஸ்டை 1992 ஆம் ஆண்டு ஆர.பிரேமதாச மைதானத்தில் அவுச்தேரிலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதில் அவர் அவுஸ்த்ரேலிய அணியின் மேக்டோமர்ட்டை தனது கண்ணி டெஸ்ட் விக்கட்டாக கைப்பற்றினார். தற்போது காலியில் இந்திய அணிக்கெதிராக நடைபெறுகின்ற முதலாவது டெஸ்டில் ஒய்வுபெருகிறார். இவரது இறுதி 800 விக்கட்டாக யார் அமையப் போகிறார்களோ.. பொறுத்திருந்து பாப்போம்.. நான்காவது நாள் கடைசியாக ஆட்டமில்ந்தவர் யுவராஜ் சிங்.


முரளியின் சாதனை எட்டமுடியாத சாதனையாக இருக்குமென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவருக்கு அடுத்தபடியாக அதிகூடிய டெஸ்ட் விக்கட்டுக்களை வீழ்த்திய பதிநேல்வரும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில்லை, விளையாடப்போவதும் இல்லை 19 வது இடத்தில் 355 விக்கட்டுகளை வீழ்த்தி விளையாடிக்கொண்டிருக்கும் ஹர்பஜன் சிங்கிற்கு எட்டாக்கரையாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

முரளி சர்வதேச கிரிக்கட்டில் மறக்க முடியாத ஒரு சின்னம் !!!

இன்னும் எழுத வேண்டுமென்று ஆசைதான் ஆனால் நேரம்...................

பிற்குறிப்பு.
முரளி   800 வது விக்கட்டாக ஓஜாவை வீழ்த்தினார்.

3 comments:

  1. 22/07/2010 ORU MARAKKA MUDIYAATHA NAALL! AAM!NAMATHU MUTHIYAA MURALITHARAN 800-VATHU WICKET--OJAA- VAI VIIZHTHTHI ,SAATHANAI PADAITHTHU VITTAAR!!!! VAAZHTHTHUKKALL!!!

    ReplyDelete
  2. faaique nd Icenathan
    thanks for visit nd comment

    ReplyDelete