Monday, March 22, 2010

இருபதுக்கு20 உலகக் கிண்ண 31 பேர் கொண்ட உத்ததேச அணி அறிவிப்பு.



 இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டியின் 30 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்ட இலங்கையின் வலது கை துடுப்பாட்ட வீரர் ஜீவந்த மகேஸ் குலதுங்க தற்போது 31 ஆவது இடத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

மாகாணங்களுக்கிடையே இடம் பெற்ற 20-20 சுற்றுப் போட்டியில் வயம்ப அணிக்காக விளையாடிய குலதுங்க மொத்தமாக 277 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்,  69.25 என்ற ஓட்ட சராசரி வீதத்தை பெற்றுள்ளார். 104 ஓட்டங்கள் என்ற ஒரு சதத்தினையும் பூர்த்தி செய்திருந்தார்.

எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மே 16 ஆம் திகதி வரை இடம் பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தெறிவு செய்யப்பட்ட 31 பேர் கொண்ட பட்டியலில்

குமார் சங்கக்கார, திலகரட்ன டில்சான், சனத் ஜயசூரிய, மஹெல ஜயவர்த்தன, சாமர கப்புகெதர, அஞ்சலோ மத்திஸ், சிந்தக ஜயசிங்க, திசார பெரேரா, முத்தையா முரளிதரன், அஜந்த மெண்டிஸ், சுராஜ் ரண்டிவ், லசித் மாலிங்க, டில்கார பெர்னாண்டோ, நுவான் குலசேகர, திலான் துசார,

சானக வெலிகெதர, சுரங்க லக்மால், பர்வீஸ் மஹ்றுப், இசுரு உடன, மாலிங்க பண்டார, மஹெல உட வத்த, லகிறு திரிமான், டினேஸ் சண்டிமல், முத்துமுடலிகே புஸ்பகுமார, கௌசல்ய வீரரட்ன, கௌசல் சில்வா, உப்புல் தரங்க, ஜீவன் மெண்டிஸ், நுவான் சொய்சா, ஜீவன்தா களுதுங்க



No comments:

Post a Comment