கவியில் ஆடும் உன் அழகே என்னை மயக்கையில் நானோ எட்டி நின்றேன் உன்னை ரசிக்க !!
ஒரு தடவை தரிசனம் தருவாயா என் அன்பே வரும் வழியில்ஆயிரம் தடைகளும் தூசியாகுமா .. உன் தரிசனம் கிடைக்குமா எட்டி நின்று தான்உன்னை காண வேண்டுமாம் சொல் என்னுயிரே !!! .
உன் மேல் உள்ள காதல் அவர்களுக்கு தெரியவாய்ப்பில்லையே ஆயினும் நான் ரசித்தேனே உன்னை ஆனந்தமாய் யாரும் அறியாமலே !! உன் இடத்துக்கு நான் வராமலே !! .
என்னருகில் உன்னை கண்டேனே அதுவே எனக்கு பேரின்பமானதே யாரும்அனுபவிக்க வாய்ப்பில்லையே இப்படி ஒரு தரிசனத்தை !!!
என்னை பாட வைத்து கேட்டாயே உன்னை பத்தி பாடத்தான் தெரியும்எனக்கு வேறொன்றும் நான் அறியேனே !!
நான் போகும் அழகே கண்டு ரசித்தாயே !! நான் தைரியமானேனே நீ என்னோடு இருக்கையிலே !!! .
என்னில் ஒவ்வொரு அசைவிலும் என்னுள் கலந்தாயே இயங்கினேன் வெற்றியை நோக்கி ...
நான் இன்னும் பல சாதனைகள் படைப்பேன் நீ தரும்நம்பிக்கையிலே ...
உன்னை நேசிக்கிறேன் என் இறைவா ... நேர் வழியில் என்னை செலுத்துவாயே ....
வேரை அறுத்து விட்டு பூக்கும் வரை காத்திருக்கிறோம்! பெளர்ண்மிக்காய் நிலாச் சோறு சமைக்கிறோம் அமாவாசையில்...! எமக்குள்ளே சமாதானத்தை தொலைத்து விட்டு உலகெங்கும் தேடுகிறோம்.